districts

img

ஆக்கூரில் மாபெரும் தூய்மைப் பணி முகாம்

மயிலாடுதுறை, ஜூன் 15 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர் ஊராட்சியில் மாபெரும் தூய்மை பணி முகாம்  சனிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) முகமது சபீர் ஆலம் முகாமை  துவக்கி வைத்தார்.

பின்னர், சுற்றுப்புறத் தூய்மை மற்றும்  பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், மக்கும் குப்பை,  மக்கா குப்பை என தரம் பிரிக்க இரு  நிறத்திலான கூடைகளையும், பிளாஸ்டிக்கை  தவிர்க்க மஞ்சள் பை ஆகியவற்றை பொது மக்கள் மற்றும் வணிகர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஊராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் நிழல்  தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

தொடர்ந்து ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கும் கிடங்கிற்கு சென்று  ஆய்வு மேற்கொண்டார். 

முன்னதாக ஆக்கூர் முக்கூட்டி லுள்ள தனியார் மண்டபத்தில் ஊராட்சித் தலைவர்  ஏ.ஆர்.சந்திர மோகன் தலைமையில், ஆக்கூர்  கிராம ஊராட்சியை குப்பையில்லாத  முன்மாதிரி கிராம ஊராட்சியாக உருவாக்கிட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடு தல் ஆட்சியர் சபீர் ஆலம், சுற்றுப்புற தூய்மை யில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வழிமுறை கள் குறித்து உரையாற்றினார். 

மாவட்ட செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி செந்தில்குமார், உதவி திட்ட அலுவ லர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகா தாரத் துறை, உணவு பாதுகாப்பு துறை அலு வலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்றாடம் தூய்மைப் பணிகளை மேற் கொள்ளும், தூய்மை காவலர்களுக்கு கூடுதல்  ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌர வப்படுத்தினார்.